உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் தட்டுப்பாடு கிராம மக்கள் தவிப்பு

குடிநீர் தட்டுப்பாடு கிராம மக்கள் தவிப்பு

அன்னூர : குடிநீர் பற்றாக்குறையால், கிராம மக்கள் தவிக்கின்றனர். ஒட்டர் பாளையம் ஊராட்சியில், ஜீவா நகர், அழகாபுரி நகர், ஆயிமாபுதூர் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.இப்பகுதி மக்கள் கூறுகையில், 'ஏற்கனவே பழைய குடிநீர் திட்டத்தில், ஜீவா நகர் பஸ் ஸ்டாப்பில் பொதுக்குழாய் செயல்பட்டு வந்தது. இந்த குழாயில் கடந்த 35 நாட்களாக குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டு விட்டது. வீடுகளுக்கு வரும் குடிநீரும் 15 நாட்களாக வரவில்லை. 3 கி.மீ., தொலைவு சென்று, குடிநீர் எடுத்து வர வேண்டி உள்ளது. விரைவில் 24 மணி நேரம் சப்ளையாகி வந்த பொதுக்குழாயில், குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டு இணைப்புகளுக்கும் வழங்க வேண்டும்' என்று, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை