உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிவராத்திரி விழா ருத்ராட்சம் வினியோகம்

சிவராத்திரி விழா ருத்ராட்சம் வினியோகம்

கோவை; சிவராத்திரி விழாவை முன்னிட்டு, இந்து மக்கள் கட்சி சார்பில், பக்தர்களுக்கு இலவசமாக ருத்ராட்சம் வழங்கப்பட்டது.கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நடந்த நிகழ்வுக்கு, இந்து மக்கள் கட்சி தெற்கு பகுதி தலைவர் பூபாலன் தலைமை வகித்தார். கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், கோவிவில் வழிபாடு செய்து, இலவச ருத்ராட்ச வினியோகத்தைத் துவக்கி வைத்தார். 5,001 பேருக்கு ருத்ராட்சம் வழங்கப்பட்டது.மாநில அமைப்பு செயலாளர் ரவி, மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !