உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்துஸ்தான் கல்லுாரியில் சிலம்பம்: 1,300 மாணவ, மாணவியர் ஆர்வம்

இந்துஸ்தான் கல்லுாரியில் சிலம்பம்: 1,300 மாணவ, மாணவியர் ஆர்வம்

கோவை : இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்துவரும் சிலம்பம் போட்டியில், 1,300 பேர் பதிவு செய்துள்ளனர்.முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவியருக்கான செஸ், கேரம், சிலம்பம் போட்டிகள், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நேற்று துவங்கின; நாளை நிறைவடைகின்றன. கல்லுாரி மாணவ, மாணவியருக்கு வரும், 17 முதல், 19ம் தேதி வரையும் இப்போட்டிகள் இடம்பெறுகின்றன.பொதுப் பிரிவினருக்கு கேரம், சிலம்பம் போட்டிகள் வரும், 19 முதல், 21ம் தேதி வரையும், அரசு ஊழியர்களுக்கு ஆண்கள், பெண்கள் என, இரு பாலருக்கும் வரும், 23, 24ம் தேதிகளிலும் போட்டிகள் நடக்கின்றன. சிலம்பம் போட்டியில், 1,300 பேர் பதிவு செய்துள்ளனர்.கேரம் போட்டியில், 114 மாணவியர், 260 மாணவர்கள் என, 374 பேர் பங்கேற்றுள்ளனர். பல்வேறு சுற்றுகளை அடுத்து, ஒற்றையர் பிரிவில் பள்ளி மாணவியரான சகோதரிகள் சுபர்னா, சுனேத்ரா மற்றும் சோபனா, மோகிதா ஆகியோர், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை