உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளநீர் விலையில் மாற்றமில்லை

இளநீர் விலையில் மாற்றமில்லை

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எந்த மாற்றமும் கிடையாது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையுடன் ஒப்பிடுகையில் எந்த மாற்றமும் இன்றி, 37 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது.இதேபோல, ஒரு டன் இளநீரின் விலை, 14,750 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இளநீர் வரத்து மிகவும் குறைந்து, தொடர்ந்து தட்டுப்பாடு ஏற்படுகிறது.கடந்த இரு மாதமாக, இளநீருக்கு மிகவும சாதகமான தட்பவெப்ப நிலை நிலவுவதால் இளநீரின் தரம் சிறப்பாக உள்ளது.பொள்ளாச்சி பகுதியில் மட்டும் மழையை காரணம் காட்டி இளநீரின் விலையை குறைத்து வாங்க முயற்சி செய்கின்றனர். நல்ல தரமான இளநீரை குறைந்த விலைக்கு விற்க வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ