உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., சபரிமாலா மீது ஏன் நடவடிக்கை இல்லை?

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., சபரிமாலா மீது ஏன் நடவடிக்கை இல்லை?

கோவை: 'மதப்பிரசாரம் செய்து வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் மற்றும் சபரிமாலா ஆகியோர் மீது, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என, தி.மு.க.,விடம் கேள்வி கேட்க, மற்ற கட்சியினருக்கு ஏன் தைரியம் வரவில்லை' என்ற கேள்வியை, முன்வைத்துள்ளார் பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்

சென்னையில் அரசு பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில், ஆன்மிக சொற்பொழிவாளர் மகா விஷ்ணு, மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக, கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதேநேரம், மாணவர்கள் மத்தியில் கிறிஸ்தவ மதத்தை திணித்து வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் மற்றும் இஸ்லாமிய கருத்துக்களை பரப்பி வரும் சபரி மாலா ஆகியோர் மீது, தமிழக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.ஏனெனில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான உமாசங்கர், தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குச் சென்று, கிறிஸ்தவ மதத்தை பரப்பி வருகிறார். இதேபோல், சபரிமாலா என்பவர், இஸ்லாமிய மத பிரசாரம் செய்து வருகிறார். இவ்விரண்டு நிகழ்வுகளும் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது; இவர்களது வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பா.ஜ.,மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாவது:

இந்து பேச்சாளர்கள், தன்னம்பிக்கை பேச்சாளர்கள் மீது, வழக்கு தொடுப்பது தி.மு.க., ஆட்சியில் எப்போதும் நடக்கும். மத நம்பிக்கை, பாவ புண்ணியங்கள் பற்றி பேசியவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, மற்ற மதத்தினரை தாஜா செய்வதற்கு, மிகப்பெரிய ஆயுதமாக தி.மு.க., பயன்படுத்துகிறது. சிறுபான்மையினரை தாஜா செய்து, அவர்களுக்கு வேண்டியதை அள்ளி விட்டு, ஓட்டு வங்கியை தன் வசம் முழுமையாக வைத்திருக்கிறது. மகா விஷ்ணு மீது வழக்குகள் போட்டதற்கு பா.ஜ., தவிர, வேறெந்த கட்சிகளும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்துக்களை கிள்ளுக்கீரையாக நினைக்கின்றனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் மற்றும் சபரிமாலா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என, தி.மு.க.,விடம் கேள்வி கேட்க, கட்சிகள், சமூக ஆர்வலர்கள், மதசார்பற்றவர்கள் என்று சொல்பவர்கள், நடுநிலை சிறுபான்மையினருக்கு ஏன் தைரியம் வரவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

சதி வலையில் அமைச்சர் மகேஷ்

இதுகுறித்து, இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது:

பள்ளிகளில் மாணவர்களுக்கு, நீதி போதனை வகுப்புகள் நடத்துவது வழக்கம். ஆன்மிகம் மதமாகி விடாது. ஆனால், அரசு உதவி பெறும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய பள்ளிகளில், தினந்தோறும் மத பிரசாரம் நடக்கிறது; கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் கிறிஸ்தவர்கள் கைகளில், பள்ளி கல்வித்துறை சென்று விட்டது. இவர்களது சதி வலையில், அமைச்சர் மகேஷ் சிக்கிவிட்டார். லியோனி, மனுஷ்ய புத்திரன், சுப.வீரபாண்டியன் போன்றவர்கள், கல்வித்துறையை வழி நடத்துகிறார்கள்.சொற்பொழிாளர் மகா விஷ்ணு மதப்பிரசாரம் செய்யவில்லை. நீதி போதனை வகுப்பு நடத்தியிருக்கிறார். அவர் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசவில்லை. ஆனால், பி.சி.ஆர்., சட்டம் போல், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி உள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதப்பிரசாரம் செய்து வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் மற்றும் சபரிமாலா ஆகியோர் மீது, ஏன் இதுவரை நடவடிக்கை பாயவில்லை?இவ்வாறு, அவர் கேள்வி எழுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

p.s.mahadevan
செப் 11, 2024 16:42

இந்துக்களுக்கு என்று ஒரு ஒட்டு வங்கி இருந்தால் அரசு அச்சம் கொள்ளும். இந்துக்களிடம் ஒற்றுமை இல்லாதது அவர்களுக்கு பலம்.


Ramaswamy Jayaraman
செப் 11, 2024 15:28

இந்து மதத்தை தவிர மாற்று மதங்களை பரப்பும் அதிகாரிகளின் பெயர் இந்து பெயர்களாக உள்ளது. ஆனால் அவர்கள் இந்துக்கள் அல்ல. இதுவே ஒரு ஏமாற்று வேலை. இந்து மதத்தை பற்றியோ அல்லது இந்து கடவுளர்களை பற்றி பேசினால் குற்றம். இபிகோ சட்டம் பாயும். மற்ற மதங்களை பரப்பினாலோ மத மாற்றம் செய்தாலோ, அது தவறு கிடையாது. என்ன உலகமடா இது,


Barakat Ali
செப் 11, 2024 12:55

ஹிந்து மத ஒழிப்பிற்கு யார் உதவினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது .....


Indian
செப் 11, 2024 12:06

பிஜேபிகாரனும் மதத்தை வச்சு பொழப்பு நடத்தறாங்க.


sugumar s
செப் 11, 2024 11:56

Both Umashankar and Sabarimala is not campaining for Hindu Religion and hence they will not be arrested. DM is not fool to arrest Christian or Islam Conversions as they win only because of them. In case of Hindus they can easily buy votes for Biriyani, Quater and 2000. other religion will not bend for this.


Ramesh Babu
செப் 11, 2024 11:21

இது தான் திராவிட மாடல் ஆட்சி


ஆரூர் ரங்
செப் 11, 2024 10:55

கம்யூனிஸ்டு கட்சியில் முக்கிய தலைவராக இருந்த ஒரு மாற்றுத்திறனாளியை கட்டுமரம் எப்படி கிண்டலடித்து பேசினார் தெரியுமா? இப்போ அல்லக்கை ஆட்களை விட்டு வழக்குப் போடும் வாரிசுக்கு தெரிந்திருக்கும்.


Rajkumar
செப் 11, 2024 10:08

தேவை என்றால் இந்துக்கள் என்று கூட்டு சேர்ப்பதை என்று நிறுத்தப போகிறார்களோ. அவர்கள் இருவர் மீதும் தவறு இருந்தால் உடனடியாக எங்கு புகார் அளிக்க வேண்டுமோ அங்கு புகார் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி சொல்லுங்கள்.உங்களுக்கு தெரியாததா. எதற்கு மீடியா வில் வந்து புலம்பி கொண்டிருக்கிறீர்கள். யார் செய்தாலும் தவறு தான்.


ஆரூர் ரங்
செப் 11, 2024 10:51

ஊழல் போலீஸிடம் புகாரளித்து குண்டாஸை எதிர்கொள்ள வேண்டுமா?. ஆளும் விடியல் குடும்பக் கட்சியை எதிர்த்து எதனை செய்தாலும் உயிருக்கு உத்திரவாதமில்லை


Dharmavaan
செப் 11, 2024 09:32

இந்த இரண்டும் துரோகிகளும் மதம் மாறிய பின் ஹிந்து பெயர்களை ஏன் வைத்துக்கொண்டிருக்கின்றன மானம் கெட்ட ஜென்மங்கள்


spr
செப் 11, 2024 08:09

உமாசங்கர் சபரிமாலா என்ற பெயர்களே சொல்கிறது, இந்துக்களுக்கு இந்துக்களே விரோதிகளென்று. இவர்கள் பெயரையாவது மாற்றிக் கொண்டிருக்கலாம் இந்துக்களுக்கு இந்துக்கள்தான் எதிரிகள் பிற மதத்தவர் எவரும் இந்து விரோத செயல்களை செய்வதில்லை பேசுவதில்லை எதிரான நடவடிக்கைகளை எடுக்கவில்லை ஆனால் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு நெற்றி நிறைய திருநீறு பூசிக்க குங்குமம் இட்டு கருங்காலி மாலையையெல்லாம் அணிந்தவர்கள், கோயில் கோயிலாக சுற்றுபவர்கள் இந்து மத நம்பிக்கைகளை இழிவாகப் பேசுவது முறையல்ல. இதனைப் பார்க்கும் போது இப்படிச் செய்பவர்கள் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ்வதனைப் பார்க்கும் போது, இந்து மதம் சொல்லும் "பாவ புண்ணியம் தவறு செய்பவர்களைக் கடவுள் தண்டிப்பார்" என்ற பேச்சுக்கள் உண்மையில்லையோ என்று நினைக்க வைக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை