உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுகலான வீதிகளில் குறையாத நெரிசல்; மாற்றத்துக்கு தேவை நடவடிக்கை

குறுகலான வீதிகளில் குறையாத நெரிசல்; மாற்றத்துக்கு தேவை நடவடிக்கை

உடுமலை : நெரிசல் மிகுந்த வீதிகளில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், நகரில் வாகன ஓட்டுநர்கள் திணறுவது தொடர்கதையாக உள்ளது.உடுமலை நகரில், வ.உசி., வீதி, சீனிவாசா வீதி, பசுபதி வீதி, தளி ரோடு, கச்சேரி வீதி ஆகிய வீதிகளில், வணிக கடைகள் அதிகளவு அமைந்துள்ளன.மிக குறுகலான, இந்த ரோட்டில், சரக்கு வாகனங்கள் அனைத்து நேரங்களிலும், அனுமதிக்கப்பட்டு, பொருட்கள் கடைக்கு இறக்கப்படுகிறது.அதே போல், 'பார்க்கிங்' வசதி இல்லாததால், கடைகள் முன்பு வரிசையாக, இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.அப்போது, பிற வாகனங்கள் செல்ல இடைவெளி கிடைக்காமல், அந்த வீதிகளில், போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. வாரத்தில், பல நாட்கள் இப்பிரச்னை, நிலவுவதால், வாகன ஓட்டுநர்கள் இந்த வீதிகளில் செல்லவே அச்சப்படுகின்றனர்.அரசு மருத்துவமனைக்கு அவசர காலத்துக்கு கூட வாகனங்கள், இவ்வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது.நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு, போக்குவரத்து போலீசார் தீர்வு காண வேண்டும் என, பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பார்க்கிங் விதிமுறைகளை அமல்படுத்த, நகராட்சி, போக்குவரத்து போலீஸ், வருவாய்த்துறையினர் ஆலோசனை நடத்தி நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை