உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அம்மனுக்கு வரமிளகாய் யாகம்

அம்மனுக்கு வரமிளகாய் யாகம்

அம்மனுக்கு வரமிளகாய் யாகம்

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆடி மாதத்தில் அம்மன் அவதரித்த நாளான நேற்று காலை, மஹாஅருள் நிஹூம்பலாயாகமும் மற்றும் ஆடிப்பூர விழா நடந்தது.விழாவில், காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமமும், காலை, 9:00 மணிக்கு மகாலலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, காலை, 10:30 மணிக்கு ேஹாமம், நிஹூம்பலாயாகமும் (வரமிளகாய் கொண்டு யாகம்) நடந்தது. அதனை தொடர்ந்து, மதியம், 12:30 மணிக்கு துர்க்கை அம்மனுக்கும், பிரத்யங்கிராதேவிக்கும் அபிேஷக ஆராதனையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.அதன்பின், அம்மனுக்கு, மஞ்சள், சந்தனம், குங்கும காப்பு அலங்காரம், வளையல் அலங்காரம், சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். யாக பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வரமிளகாய் யாகத்தை கோவில் அர்ச்சகர்கள் கண்ணன், விஜயகுமார் செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல், பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை