உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அருவங்காட்டில் 1.5 கிலோ போதை வஸ்து பறிமுதல்

அருவங்காட்டில் 1.5 கிலோ போதை வஸ்து பறிமுதல்

குன்னுார், : அருவங்காடு பகுதியில்,'கூல்லிப்' உட்பட ஒன்றரை கிலோ போதை வஸ்து பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் அருவங்காடு பகுதியில் 'கூல்லிப்' உட்பட போதை வஸ்து விற்பனை செய்வதாக, தனி பிரிவு காவலர் காஜா மொய்தீனுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், இவருடன் அருவங்காடு எஸ்.ஐ., ஜெயரத் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அதில், பெரிய பிக்கட்டியை சேர்ந்த நாகராஜ்,55, என்பவரிடம் ஒன்றரை கிலோ அளவிலான, 'கூல்லிப்' உட்பட போதை வஸ்து இருந்தன. அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்கு பயன்படுத்திய பைக் உட்பட போதை வஸ்துக்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி