உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாய் கடித்ததில் 4 பேர் காயம்

நாய் கடித்ததில் 4 பேர் காயம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, கண்ணப்பன் நகர் சுண்ணாம்பு கால்வாய் அருகே, தனியார் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், சங்கிலியை அறுத்துக்கொண்டு ரோட்டுக்கு வந்தது. அவ்வழியாக சென்ற முருகன், உதயகுமரன், ராதாகிருஷ்ணன், சாரதா ஆகியோரை, கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அந்த நாய் யாருடையது என்பது குறித்து, மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி