100 பேருக்கு வேலை வாய்ப்பு 2ம் கட்ட தேர்வுக்கு 48 பேர்
கோவை; கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடந்தது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த மனுதாரர்கள் என, 550 பேர் பங்கேற்றனர்.பல்வேறு பணி காலியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்ய, 46 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், 100 பேருக்கு உடனடி வேலை வாய்ப்பு ஆணை வழங்கப்பட்டது. 48 பேர், இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.