உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருமுருகன் அருள்நெறிக்கழக 50ம் ஆண்டு விழா

திருமுருகன் அருள்நெறிக்கழக 50ம் ஆண்டு விழா

அன்னுார்: திருமுருகன் அருள்நெறி கழக 50வது ஆண்டு விழா இன்று நடக்கிறது.அன்னுார் திருமுருகன் அருள்நெறிக் கழகம் துவக்கப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பொன்விழா இன்று மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு முருகப்பெருமானுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து அலங்கார பூஜை, சண்முகார்ச்சனை நடைபெறுகிறது.திருமுருகன் அருள்நெறி கழக நிர்வாகிகள் கவுரவிக்கப்படுகின்றனர். இரவு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை இரவு முருக பக்தர்கள் ஆறுபடை வீடுகளுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை