மேலும் செய்திகள்
வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டி
20-Aug-2025
கோவை; கோவை மாவட்ட மாஸ்டர்ஸ் அதலெட்டிக் அசோசியேசன் (கே.டி.எம்.ஏ.ஏ.,) சார்பில், மாவட்ட அளவிலான தடகளப் போட்டி, நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. 30 முதல், 80 வயது வரையுள்ள 202 வீரர்கள், 128 வீராங்கனைகள் என, 330 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இவர்களுக்கு, 100 மீ., 200 மீ., 800 மீ., 1,500 மீ., ஓட்டம், 5 கி.மீ., 3 கி.மீ., நடைபயணம், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னதாக, மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி, போட்டியை துவக்கி வைத்தார். ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியில், சிறுமுகையை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டரான, 55 வயதான அறிவழகன், மும்முறை தாண்டுதல், 800 மீ., ஓட்டம், 5 கி.மீ., நடைபயணம் ஆகிய மூன்று போட்டிகளில் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்களை வென்றார். இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள், டிச., மாதம் திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். கே.டி.எம்.ஏ.ஏ., செயலாளர் வேலுசாமி, மகளிர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
20-Aug-2025