உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கைவினைஞர் பயிற்சி கலெக்டர் அழைப்பு

கைவினைஞர் பயிற்சி கலெக்டர் அழைப்பு

கோவை;கைவினைஞர் பயிற்சி திட்டத்தில், 2017-19ல் இரண்டாண்டு தொழிற்பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும், தேர்வில் பங்கேற்க இயலாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு, மார்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இத்தேர்வு தொடர்பாக, முன்னாள் பயிற்சியாளர்கள், தாங்கள் பயின்ற தொழிற்பயிற்சி நிலையங்களை, வரும், 15ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வு கட்டணத்தை செலுத்தி, தேர்வில் பங்கேற்கலாம். விபரங்களுக்கு, https://skilltraining.tn.gov.inமற்றும் https://ncvtmis.gov.inஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்