உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண் குழந்தை பாதுகாப்பு சட்டம் பற்றி விழிப்புணர்வு

பெண் குழந்தை பாதுகாப்பு சட்டம் பற்றி விழிப்புணர்வு

ஆனைமலை;ஆனைமலை அருகே பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டம் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஆனைமலை அருகே தென்சித்துார் ஊராட்சியில், ஆல் தி சில்ரன் அறக்கட்டளை, சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மற்றும் ஊராட்சி சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அதில், குழந்தை திருமணம் தடுப்பு, குழந்தை திருமண தடைச்சட்டம், பெண் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சமூக நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ