உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைத்தார் வரத்து சரிவு; விலை உயர்வால் மகிழ்ச்சி

வாழைத்தார் வரத்து சரிவு; விலை உயர்வால் மகிழ்ச்சி

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், வாழைத்தார் வரத்து குறைந்த நிலையில், விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், விளைநிலத்தில் தனிப்பயிராகவும், தென்னையில் ஊடுபயிராகவும் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள், தினசரி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஏல முறையில் விற்பனை செய்யப்படுவதால், வாழைத்தாருக்கு உரிய விலை கிடைக்கிறது.செவ்வாழை (கிலோ) --- 80, நேந்திரன் --- 50, ரஸ்தாளி --- 50, கதளி --- 55, பூவன் --- 40, சாம்பிராணி வகை --- 45 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த வாரத்தை விட, செவ்வாழை கிலோ - 10, ரஸ்தாளி, பூவன் மற்றும் சாம்பிராணி வகை --- 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. கதளி வகை வாழைத்தார் விலையில் மாற்றம் இல்லை. நேந்திரன் வாழைத்தார் விலை கிலோவுக்கு, 10 ரூபாய் குறைந்துள்ளது.வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த வாரத்தை விட, 50 சதவீதம் வாழைத்தார் வரத்து குறைந்துள்ளது. இதனால் ஒரு சில ரக வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை