உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைத்தார் வரத்து சரிவு; விலை உயர்வால் மகிழ்ச்சி

வாழைத்தார் வரத்து சரிவு; விலை உயர்வால் மகிழ்ச்சி

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு, வாழைத்தார் வரத்து சரிந்ததால், விலை உயர்ந்துள்ளது. கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில், நேற்று செவ்வாழை கிலோ - - 70, நேந்திரன் -- 40, பூவன் --- 37, ரஸ்தாளி --- 42, கதளி --- 38, சாம்பிராணி வாழைத்தார் --- 45 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கடந்த வாரத்தை காட்டிலும், தற்போது நேந்திரன் கிலோ --- 10, பூவன் --- 2, கதளி --- 3, சாம்பிராணி -- 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த இரு தினங்களுக்கு முன், வாழைத்தார்கள் வரத்து மிதமாக இருந்தது. ஆனால், நேற்று அனைத்து வகை வாழைத்தார்கள் வரத்தும் மிகக்குறைவாக இருந்தது. இதனால், அனைத்து வகை வாழைத்தார்கள் விலையும் உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி