மேலும் செய்திகள்
தொழிலாளி கொலை? உறவினர்கள் மறியல்
26-Aug-2025
போத்தனுார்; கோவையில் தண்டவாளம் அருகே குழந்தை இறந்து கிடந்த வழக்கில், குற்றவாளிகளை பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம், போத்தனுார் ரயில்வே போலீசார், போத்தனுார் - இருகூர் ரயில் பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, இருகூர் - ராவாத்துார் ரயில் தண்டவாளம் அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தையின் சடலம் கிடப்பதை பார்த்தனர். அருகில் மிளகாய் பொடி, கோழி ரத்தம், கோழிக்கால் இருந்தது. குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என, தகவல் பரவியது. போலீசார், மோப்பநாய் உதவியுடன் ஆய்வு செய்தனர். இவ்விவகாரத்தில், 'குழந்தையை நரபலி கொடுக்கவில்லை. குழந்தையை கொலை செய்யும் நோக்கில் தண்டவாளத்தில் வைத்ததால், ரயில் சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி உயிரிழந்திருக்கலாம். கொலையை திசை திருப்பவே மிளகாய் பொடி, கோழி ரத்தத்தை தெளித்துள்ளனர்' என, போலீசார் தெரிவித்தனர். டி.எஸ்.பி., பாபு தலைமையிலான தனிப் படையினர் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
26-Aug-2025