உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா இன்று தேரோட்டம் துவக்கம்

சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா இன்று தேரோட்டம் துவக்கம்

பொள்ளாச்சி ;பொள்ளாச்சி அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில், தேரோட்டம் இன்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.பொள்ளாச்சி அருகே, பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த, 12ம் தேதி துவங்கியது. அன்று, சூலக்கல் ஆற்றில் இருந்து மூங்கில் கம்பம், கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.ஆற்றுப்பகுதியில் மூங்கில் மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மலரால் அலங்கரித்த மூங்கிலை, மேள, தாள, இசையுடன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். கோவில் வளாகத்தில் மூங்கில், மூன்றாக உடைக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து வேல் புறப்பாடு, பூச்சாட்டு விழா மற்றும் கிராமசாந்தி, வாஸ்து சாந்தி நடந்தது. கடந்த, 20ம் தேதி இரவு, கம்பம் நாட்டு விழா, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.21ம் தேதி காலை கொடியேற்றப்பட்டது. இரவு, அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.கடந்த, 22ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை தினமும் காலை, மற்றும் இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா; இரவு, 9:00 மணிக்கு பூவோடு எடுக்கப்பட்டது. நேற்று காலை, மாவிளக்கு, பொங்கல் வைத்தல், அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இன்று, மாலை, 4:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மாலை, இரண்டாம் நாள் தேரோட்டம், 31ம் தேதி மாலை, மூன்றாம் நாள் தேரோட்டம் நடக்கிறது. வரும், ஜூன் 1ம் தேதி மதியம், மஹா அபிேஷகமும் நடக்கிறது.

தேர் புதுப்பிப்பு

முதல் நாள் கிழக்குப்பகுதியிலும், இரண்டாம் நாள் கோவில் மேற்கு பகுதியிலும் தேர் நிறுத்தம் செய்யப்படுகிறது. மூன்றாம் நாள் தேர் நிலைக்கு வருகிறது. தேரோட்டம் நடப்பதால், கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு, 45 அடி உயரம் உள்ள அம்மன் தேரும், 16 அடி உயரமுள்ள விநாயகர் தேரும் புதுப்பித்து, வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை