உள்ளூர் செய்திகள்

சிட்டி கிரைம்

மெத்தபெட்டமைன் வைத்திருந்தவர்கள் கைது

ரத்தினபுரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரத்தினபுரி சாஸ்திரி நகர் மயானம் அருகில் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், அவர்கள் பீளமேட்டை சேர்ந்த டேவிட் வினோத் ராஜ், 33, கவுண்டம்பாளையத்தை சேர்ந்த அருண், 32 என்பது தெரியவந்தது. அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து, அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது, அவர்களிடம் சுமார், 5 கிராம் அளவில் போதைக்காக பயன்படுத்தப்படும் மெத்தபெட்டமைன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

பெயின்டிங் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்

வடவள்ளி, காமராஜர் வீதியை சேர்ந்தவர் வசந்த், 22; தனியார் பெயின்ட் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 19ம் தேதி சிங்காநல்லுார், ஜி.வி., ரெசிடென்சி பகுதியில் உள்ள, பாலகுரு என்பவர் வீட்டிற்கு பெயின்டிங் செய்ய சென்றுள்ளார். வேலை நடந்துகொண்டு இருக்கும் போது, பாலகுருவின் மகன் பரத் அங்கு வந்து, பெயின்ட் சரியாக இல்லை எனக்கூறி, வாக்குவாதம் செய்துள்ளார். வசந்தை தாக்கியுள்ளார். காயமடைந்த வசந்த் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வசந்தின் புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் பரத் மீது வழக்கு பதிவு செய்தனர்.

பைக்கில் சென்றவரிடம் செல்போன் பறிப்பு

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சபிதா, 40. இவர் ராமநாதபுரம், ஐயப்பன் கோவில் வீதியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், சபிதாவின் இரு சக்கர வாகனத்தில் மோதினார். இதன் பின், சபிதாவிடம் இருந்த மொபைல் போனை பறித்துக்கொண்டு, தப்பிச் சென்றார். சபிதா, ராமநாதபுரம் போலீசில் புகார் அளிக்க, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை