மேலும் செய்திகள்
தடுப்பு சுவரில் மோதிய கார் கோவை அருகே இருவர் பலி
02-Jun-2025
கோவை ராமநாதபுரம் பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் சங்கர், 18. உள் அலங்கார வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம், சங்கர் தன் வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த இருவர், சங்கரை மறித்து தகராறு செய்தனர். அவரை கேலி செய்தனர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இருவரும் சங்கரை தாக்கினர். சங்கர் அளித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், சங்கரை தாக்கியது ராமநாதபுரம் ஒலம்பஸை சேர்ந்த தாமோதரன், 20, அருணாச்சல காலனியை சேர்ந்த ஹரிஹரன், 22 எனத் தெரிந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர். ஆட்டோ திருடிய நபர்களுக்கு வலை
கோவை ஆர்.எஸ்.புரம் பூமார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் மணி, 45; ஆட்டோ டிரைவர். கடந்த, 7 ம் தேதி இரவு தேவாங்கபேட்டை ரோட்டில், தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது, ஆட்டோ மாயமாகியிருந்தது. பல்வேறு பகுதிகளிலும் ஆட்டோவை தேடினார். ஆட்டோ கிடைக்கவில்லை. மணி ஆர்.எஸ்.புரம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், ஆட்டோவை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். கட்டிலில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
கோவை சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர்., ரோட்டை சேர்ந்தவர் கண்ணம்மாள், 85. இவர் வயது மூப்பின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று மூதாட்டி, வீட்டு கட்டிலில் படுத்திருந்தார். அப்போது தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மூதாட்டியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சாயிபாபா காலனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
02-Jun-2025