உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வசூல் பணம் ரூ.35 லட்சத்துடன் கோவை இளைஞர் எஸ்கேப்

வசூல் பணம் ரூ.35 லட்சத்துடன் கோவை இளைஞர் எஸ்கேப்

கோவை: விற்பனையாளராக பணியாற்றிய நிறுவனத்துக்குச் சேர வேண்டிய ரூ.35 லட்சம் பணத்தை மோசடி செய்து தப்பிய ஊழியரை போலீசார் தேடுகின்றனர்.கோவை, ராமநாதபுரம், பரி நகரை சேர்ந்தவர் சங்கர், 43; 'பிரிட்டானியா பிஸ்கட்' விநியோகிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது நிறுவனத்தில் முருகன் என்பவர் விற்பனையாளராக பணியாற்றினார். நகரில் உள்ள பல்வேறு கடைகளுக்கு முருகன் வாயிலாக பிஸ்கட் சப்ளை செய்யப்பட்டது.சில மாதங்களாக விற்பனை செய்யப்பட்ட பிஸ்கட்களுக்கான தொகை சங்கருக்கு வரவில்லை. கடைக்காரர்களிடம் அவர் விசாரித்தார். அவர்கள் முருகனிடம் பணம் கொடுத்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து முருகனிடம் விசாரித்ததில் இருந்து, அவர் வேலைக்கு வரவில்லை.சந்தேகம் அடைந்த சங்கர், நிறுவனத்தின் வரவு - செலவுகளை ஆய்வு செய்தபோது, ஆறு மாதங்களில் ரூ.35 லட்சம் பணம் கணக்கில் வராதது தெரியவந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். தலைமறைவாகியுள்ள முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி