உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களுக்கு கட்டாய டிசி

மாணவர்களுக்கு கட்டாய டிசி

கோவை; கோவையில் அரசு உதவி பெறும் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவிக்கு, கட்டாயப்படுத்தி மாற்றுச் சான்றிதழ் (டி.சி.,) வழங்கப்பட்டுள்ளது.கற்றலில் குறைபாடுடைய மாணவர்களை, கட்டாயப்படுத்தி பள்ளியிலிருந்து டி.சி., வழங்கி வெளியேற்றக்கூடாது என்று, தனியார் பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து, பள்ளிகள் இன்னும் ஒருவாரத்தில் திறக்கவுள்ள நிலையில், கோவையில் ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு மாணவிக்கு வலுக்கட்டாயமாக டி.சி., வழங்கப்பட்டுள்ளது.மாணவியின் பெற்றோரை சமாதானப்படுத்தி, அவர்களின் ஒப்புதலோடு டி.சி., வழங்கப்பட்டதாக சக மாணவியர் கூறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட பள்ளியின் பெயரை குறிப்பிட்டு, அந்த பள்ளியில் மாணவியை சேர்க்க, பெற்றோரிடம் சிபாரிசும் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது, பல பள்ளிகளில், 100 சதவீத தேர்ச்சி விகிதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தலைமையாசிரியர்கள் இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க நேரிடுகிறது.இதற்கு முன்பு தனியார் பள்ளிகளில் பின்பற்றப்பட்ட நடைமுறையை, இப்போது அரசு உதவிபெறும் பள்ளிகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளது துர்திர்ஷ்டவசமானது. டி.சி., வழங்கிய பள்ளியின் தலைமையாசிரியர் கூறுகையில், 'யாரையும் கட்டாயப்படுத்தி டி.சி., வழங்கவில்லை. பெற்றோரின் கோரிக்கையின் பேரில் மட்டுமே வழங்கப்பட்டது'என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

PUNITHA ALAGESAN
ஜூன் 18, 2025 14:32

என் மகன் தனியார் பள்ளியில் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை இலவசக் கட்டாய கல்வி மூலம் படித்து முடித்து தற்போது அரசாங்க பள்ளியில் சேர மாற்று சான்றிழ் கேட்டும் தர மறுக்கின்றனர்.அதிகபடியான கட்டணம் கட்டினால்தான் தருவோம் என்கின்றனர்.இதனால் என் மாணவனின் கல்வி பாதிக்கபடுகிறது.ஏதாவது நடவடிக்கை எடுக்கமுடியுமா? என தெரியபடுத்தவும்


முக்கிய வீடியோ