நாளை மின்நுகர்வோர் குறை கேட்பு கூட்டம்
பொள்ளாச்சி ; பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், நாளை, (13ம் தேதி) காலை, 11:00 முதல் 1:00 மணி வரை நடக்கிறது.பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து, தீர்வு காணப்படும்.இத்தகவலை பொள்ளாச்சி செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.