உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

கோவை; மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் மக்கள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம். இந்நிலையில், தெற்கு மண்டலம், 77, 78வது வார்டு மக்களுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் செல்வபுரம், ஆர்.ஆர். மஹால் திருமண மண்டபத்தில் இன்று நடக்கிறது. இதனால், இன்று நடைபெறவிருந்த மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை