வாசகர்கள் கருத்துகள் ( 1 )
N S
அக் 17, 2025 17:12
ஆழ்ந்த அனுதாபங்கள். தலைப்பு சரி செய்யவும் கோவையில் அல்ல.
கோவை: கோவையில் கார் மீது லாரி மோதிய விபத்தில் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி, குமரன் நகரை சேர்ந்த சுப்பிரமணி,60, இவரது மனைவி கலாவதி,56. இவர்களின் மகன் ராகேஷ்,35, மருமகள் ராஜேஸ்வரி,28, ஆகியோர் குடும்பத்துடன் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலுக்கு காரில் சென்றனர். இன்று அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கம்பேட்டை பகுதியில் கார் மீது லாரி நேருக்கு நேர் மோதியில் சுப்பிரமணி, கலாவதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் மகன் மற்றும் மருமகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆழ்ந்த அனுதாபங்கள். தலைப்பு சரி செய்யவும் கோவையில் அல்ல.