வளர்ச்சி பணிகளை சீக்கிரம் முடிக்கணும்
கோவை; கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. எம்.பி.க்கள் ராஜ்குமார், ஈஸ்வரசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரகவ ளர்ச்சி மற்றும் ஊராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தாட்கோ, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித்திட்ட பணி குறித்து விவாதிக்கப்பட்டது. நடந்து வரும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க எம்.பி.க்கள் அறிவுறுத்தினர். கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.