உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோவிலில் கிருத்திகை பூஜை பக்தர்கள் திரளாக பங்கேற்பு

 கோவிலில் கிருத்திகை பூஜை பக்தர்கள் திரளாக பங்கேற்பு

வால்பாறை: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த, மார்கழி மாத கிருத்திகை பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மார்கழி மாத கிருத்திகை பூஜை நடந்தது. பூஜையில் நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. பின் காலை, 7:00 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களைக்கொண்டு அபிேஷக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. அதனை தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி முருகபெருமானை மகிழ்வித்தனர். கிருத்திகை பூஜையில் பங்கேற்ற நுாற்றுக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல், வால்பாறை அடுத்துள்ள முடீஸ் சுப்பிரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பாலமுருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில், கிருத்திகை பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை