உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர்-பட்டம் மெகா வினாடி-வினா போட்டி; ஆர்வமுடன் பதிலளித்து மாணவர்கள் அசத்தல்

தினமலர்-பட்டம் மெகா வினாடி-வினா போட்டி; ஆர்வமுடன் பதிலளித்து மாணவர்கள் அசத்தல்

கோவை ; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நேற்று நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டியில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பதிலளித்து அரையிறுதிக்கு முன்னேறினர்.'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில் மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தவும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் விதமாகவும் கடந்த, 2018ம் ஆண்டு முதல் 'வினாடி-வினா' போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான 'வினாடி வினா விருது, 2024-25' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் கடந்த மாதம், 8ம் தேதி துவங்கியது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது.'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு அரையிறுதி போட்டி நடக்கும்.இதில், இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டி நடத்தப்படும். இறுதி போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. நேற்று பள்ளபாளையத்தில் உள்ள விவேகானந்தா கல்வி நிலையம் மெட்ரிக் பள்ளியில் நடந்த வினாடி-வினா நிகழ்ச்சியில், 176 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர்.இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'டி' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவிகள் ரூபா, வர்ணிகா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி இயக்குனர் சுந்தரநாதன், முதல்வர் வனிதாமணி ஆகியோர் பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நளந்திருயாழினி, சுந்தரவள்ளி ஆகியோர் உடனிருந்தனர்.அதேபோல், பீளமேடு, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மேல்நிலை பள்ளியில் நடந்த போட்டியில், 62 பேர் தகுதிச் சுற்றுக்கான தேர்வு எழுதினர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா நடத்தப்பட்டது.இதில், 'பி' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி ஸ்ரீ கவுசிகா தேவி, ஆறாம் வகுப்பு மாணவி யோகஸ்ரீ ஆகியோர் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் ரோஸ்லின் ஜெயா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சீதாலட்சுமி, ஆசிரியர்கள் உமாதேவி, சோனா, நீலாவதி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி