மாணவர்களுக்கு நோட்டு வினியோகம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஜோதிநகர் படிகள் படிப்பகத்தில், 25வது நிகழ்வு நடந்தது.முன்னாள் நகராட்சி தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். படிப்பக நிறுவனர் ஜெயக்குமார், வரவேற்றார். ஆசிரியர் பாபு, சமூக ஆர்வலர் சின்னச்சாமி, மாகாளியம்மன் கோவில் அறங்காவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக, சுவாமி ரவிஜீ, சவுந்தர்ராஜன், மணி ஆகியோர் கலந்து கொண்டனர். கவிஞர் பாபு எழுதிய 'கிருஷ்ணபோயர் யார்' என்ற புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டது. பொள்ளாச்சி இலக்கிய வட்டத் தலைவர் அம்சப்ரியா பேசினார். பள்ளி மாணவர்களுக்கு பேனா, நோட்டுகள் வழங்கப்பட்டன. பி.ஜி., அறக்கட்டளை செயலாளர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.