மேலும் செய்திகள்
வண்ணக் கோலமிட்டு எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு
3 minutes ago
ஆட்டோமேட்டிவ் துறையின் புதிய நுட்பங்கள் கண்காட்சி
4 minutes ago
வேலையுடன் ஊக்கத்தொகை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
4 minutes ago
கோவைக்கு கிடைத்தது விருது
5 minutes ago
கோவை: பீளமேடு விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன் நகர் பகுதியில், கடந்த 2ம் தேதி இரவில், கல்லுாரி மாணவி ஒருவர், ஆண் நண்பருடன் காருக்குள் பேசிக்கொண்டிருந்த போது, மொபட்டில் வந்த மூன்று நபர்கள், ஆண் நண்பரை தாக்கி விட்டு, மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பினர். இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம், சிங்கம்புனரியை சேர்ந்த சதீஸ், 30, இவரது சகோதரர் கார்த்திக், 21, மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா,20, ஆகியோரை மறுநாள் போலீசார்துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். நேற்று முன் தினம் அடையாள அணிவகுப்பு நடந்தது. குற்றம் சுமத்தப்பட்ட மூவரை, பாதிக்கப்பட்ட மாணவி அடையாளம் காண்பித்தார். கைதான மூவரும், பாலியல் பலாத்காரம் செய்ததை உறுதிபடுத்த, உயிரணு, ரத்த மாதிரிகள் சேகரித்து, டி.என்.ஏ., பரிசோதனைக்காக, சென்னையிலுள்ள அரசு பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3 minutes ago
4 minutes ago
4 minutes ago
5 minutes ago