உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னை மரம் ஏறிய முதியவர் விழுந்து பலி

தென்னை மரம் ஏறிய முதியவர் விழுந்து பலி

மேட்டுப்பாளையம் : தென்னை மரம் ஏறிய முதியவர், கீழே விழுந்து பலியானார்.ஈரோட்டை சேர்ந்தவர் பெருமாள், 70; மரம் ஏறும் தொழிலாளி. நேற்று முன்தினம் சிறுமுகை அருகே தியேட்டர்மேடு பகுதியில் தென்னை மரத்தில் ஏறி உள்ளார். அப்போது திடீரென மரத்தின் உச்சியில் இருந்து அவர் மயங்கி கீழே விழுந்தார்.இதில் படுகாயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே, இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிறுமுகை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை