நாளை நடக்குது மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
கிணத்துக்கடவு;நெகமம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை, 15ம் தேதி நடக்கிறது. நெகமம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நெகமம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை, 15ம் தேதி காலை 11:00 மணிக்கு மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் தலைமையில் நடக்கிறது. எனவே, நெகமம் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள மின் நுகர்வோர்கள், குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று, மின் வினியோகம், மின்துறை குறித்த குறைகளை தெரிவிக்கலாம். இத்தகவலை, நெகமம் செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்தார்.