உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளை நடக்குது மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாளை நடக்குது மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கிணத்துக்கடவு;நெகமம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை, 15ம் தேதி நடக்கிறது. நெகமம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நெகமம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை, 15ம் தேதி காலை 11:00 மணிக்கு மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் தலைமையில் நடக்கிறது. எனவே, நெகமம் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள மின் நுகர்வோர்கள், குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று, மின் வினியோகம், மின்துறை குறித்த குறைகளை தெரிவிக்கலாம். இத்தகவலை, நெகமம் செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ