உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெருமாள் கோவிலில் கொடியேற்றம்

பெருமாள் கோவிலில் கொடியேற்றம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பழையபுதூரில் உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவ விழாவை ஒட்டி கொடியேற்றம் நடந்தது.நேற்று காலை,11:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு பெருமாள் அன்னப்பட்சி வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று புதன்கிழமை மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 6:00 மணிக்கு சேஷ வாகன உற்சவம் நடக்கிறது. மூன்றாம் நாள் கருட வாகன உற்சவமும், நான்காம் நாள் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவை ஒட்டி திருவாய்மொழி சேவா காலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆதிமூர்த்தி பெருமாள் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி