அரசு மருத்துவமனை வளாகத்தில் நான்கு பேருக்கு அரிவாள் வெட்டு
அன்னுார்; அன்னுார் அருகே அல்லி குளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 70. இவரது வீட்டுக்கு அருகே பழனியம்மாள் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் பொது சுவர் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. நேற்று முன்தினம் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். காயம் அடைந்தவர்கள் அன்னுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது அங்கு சென்ற கிட்டுசாமி, 45. அவரது மனைவி தேவி, 41. மகன் கார்த்தி, 20. 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து அரிவாளால் சுப்பிரமணி, காளியம்மாள், ராஜேந்திரன், சந்திரன் ஆகியோரை வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். நான்கு பேரும் அன்னுார் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதையடுத்து அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து ௪ பேரை கைது செய்தனர்.