பழம், காய்கறி மதிப்புக்கூட்டல் பதப்படுத்துதல் இலவச பயிற்சி
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நாளை முதல் நவ., 26ம் தேதி வரை, பழங்கள் மற்றும் காய்கறி மதிப்புக் கூட்டுதல் மற்றும் பதப்படுத்தல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், பழம் காய்கறி மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், பதப்படுத்துதல் மற்றும் உணவுப் பாதுகாப்பு நுட்பங்கள், செய்முறை அடிப்படையிலான நடைமுறை பயிற்சி, வங்கிக் கடன் பெறும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். வயது வரம்பு 18 முதல் 35 வயதுக்குள். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் இன்று (29ம் தேதி), பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு, 97911 77578 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.