உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொரோனா பாதிப்பில்லை சுகாதாரத்துறை தகவல்

கொரோனா பாதிப்பில்லை சுகாதாரத்துறை தகவல்

பொள்ளாச்ச : கோவை மாவட்டத்தில், இதுவரை கொரோனா பாதிப்புகள் ஏதும் பதிவாகவில்லை, என, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி தெரிவித்தார்.தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பெரிய பாதிப்புகள் இல்லை எனினும், மாநில சுகாதாரத்துறை, மாவட்ட அளவில் அலர்ட்டாக இருக்க அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.அதன்படி, பாதிப்புகள் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களது வீடுகள், சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்புகளை வழக்கம் போல் மேற்கொள்கின்றனர்.மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், ''விமானநிலையங்களில் சர்வதேச விமானங்களில் வருபவர்களை, சுகாதாரத்துறை பணியாளர்கள், தெர்மல் ஸ்கிரீனிங் வாயிலாக கண்காணிக்கின்றனர். காய்ச்சல் போன்ற அறிகுறி இருப்பின் தனிமைப்படுத்தப்படுவார்கள்.கோவையில் இதுபோன்ற பாதிப்புகள் ஏதும் இல்லை. பொதுமக்கள் அச்சம், பதட்டம் அடைய வேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து யாரேனும் வந்தாலும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ