உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலை கும்பாபிஷேக விழா  பலத்த போலீஸ் பாதுகாப்பு 

மருதமலை கும்பாபிஷேக விழா  பலத்த போலீஸ் பாதுகாப்பு 

கோவை; மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, பாதுகாப்பு பணியில் 1000 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஏப்., 4) நடக்கிறது. விழாவுக்கு சுமார் 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவை முன்னிட்டு, பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, விழாவுக்கு வரும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பொது மக்களின் பாதுகாப்புக்காகவும், வெடிகுண்டு நிபுணர்கள் உட்பட, 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை