வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவர்கள் பாட்டிற்கு மோசடி செய்வார்களாம் அப்புறம் நீதி வேண்டி நீதிமன்றம் செல்வார்களாம். நல்ல தொலை நோக்கு பார்வை. இனி மோசடி பாஸ்போர்ட் பெற்று வெளி நாடு செல்பவர்கள்களுக்கு இது ஒரு பாடம்
மலேஷியாவிற்கு வேலைக்கு சென்று, இறந்தவரின் உடலை, அந்நாட்டிலேயே அடக்கம் செய்து, இறப்புச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.ராமநாதபுரம் மாவட்டம், ரோஷன் ரிஷானா தாக்கல் செய்த மனு: என் கணவர் பைரோஸ்கான், மலேஷியாவில் ஒரு ஹோட்டலில் சமையலராக பணிபுரிந்தார். அவர், மாரடைப்பால் இறந்து விட்டதாக, 2024 டிசம்பர், 29ல் எனக்கு தகவல் வந்தது. கோலாலம்பூர் மலாயா மருத்துவ பல்கலை பிணவறையில் உடல் உள்ளது. உடலை அடக்கம் செய்ய முயன்ற போது, அவர் தவறான விபரங்களை வழங்கி, மலேஷியா பயணம் செய்தது தெரிய வந்தது. தன் பெயர் கனி எனக்கூறி, பாஸ்போர்ட் பெற்றுள்ளார். அவர் வேலை செய்த நிறுவன முதலாளியிடம், உடலை ஒப்படைத்து அடக்கம் செய்ய, ஆட்சேபனை இல்லை என்பதற்குரிய சான்றை, சம்பந்தப்பட்ட நாட்டின் துாதரகம் வழங்க வேண்டும் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது. கனி என்ற பெயரில், பைரோஸ்கான் மலேஷியா சென்றதால், அங்குள்ள இந்திய துாதரகம், அதற்கான சான்றிதழை வழங்க தயாராக இல்லை.கனி மற்றும் பைரோஸ்கான் ஒரே நபர் தான். பைரோஸ்கானுடனான எனது உறவை நிரூபிக்க, திருமண அழைப்பிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். மத சடங்குகள் மற்றும் பழக்க வழக்கங்களை பின்பற்றி, மலேஷியாவில் உடலை அடக்கம் செய்ய வேண்டும். பைரோஸ்கான் பெயரில் இறப்புச்சான்று வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.நீதிபதி வி.லட்சுமிநாராயணன் பிறப்பித்த உத்தரவு:பைரோஸ்கானும், கனியும் ஒருவர் தான் என, அவரது ஊரைச் சேர்ந்தவர்களின் ஒப்புதல் அறிக்கை, ஜமாத் நிர்வாகம் வழங்கிய கடிதத்தை, மனுதாரர் தரப்பு சமர்ப்பித்தது. பைரோஸ்கானின் உடலை, மலேஷியாவில் அடக்கம் செய்வதில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆட்சேபனை இல்லை. குடும்பமானது பொருளாதார ரீதியாக நன்றாக இல்லை. உடலை இந்தியாவிற்கு கொண்டு வரும் சூழலில் அவர்கள் இல்லை. மலேஷியாவில் உடலை அடக்கம் செய்வது மட்டுமல்லாமல், பைரோஸ்கான் உயிருடன் இல்லை என்பதற்குரிய சான்றை மனுதாரருக்கு வழங்குவதை உறுதி செய்ய, மலேஷியாவிலுள்ள இந்திய துாதரக உயர் அதிகாரி, முதல்நிலை செயலர், சென்னையிலுள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரக கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். - - நமது நிருபர்-
இவர்கள் பாட்டிற்கு மோசடி செய்வார்களாம் அப்புறம் நீதி வேண்டி நீதிமன்றம் செல்வார்களாம். நல்ல தொலை நோக்கு பார்வை. இனி மோசடி பாஸ்போர்ட் பெற்று வெளி நாடு செல்பவர்கள்களுக்கு இது ஒரு பாடம்