உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரதிபலிப்பான் அமைக்கணும்

பிரதிபலிப்பான் அமைக்கணும்

மடத்துக்குளம்; மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான், மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. இங்கு அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், பஸ், லாரி, வேன்கள், கார் செல்கின்றன. ஆனால், இந்த பாலத்தில் பிரதிபலிப்பான், மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பாலத்தில் இவை அமைக்க நெடுஞ்சாலை மற்றும் பேரூராட்சியினர் நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை