உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்வு

இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்வு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:பகல் நேர வெப்பம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், பனியின் தாக்கம் மிகவும் குறைந்துள்ளதாலும், இளநீர் சந்தை சூடுபிடித்துள்ளது.கடந்தாண்டை ஒப்பிடும் போது, இந்தாண்டு இந்த மாதம் இளநீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. விவசாயிகள், இனி வியாபாரிகளிடம் போராடி நல்ல விலையை பெற முயற்சிக்க வேண்டும்.இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 20 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது.ஒரு டன் இளநீரின் விலை, 7,500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இளநீரின் விலை இனி தொடர்ந்து உயரும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ