தொடர் மழை பொழிவால் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
வால்பாறை: வால்பாறையில் பெய்யும் பருவமழையினால், தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.வால்பாறை மலைப்பகுதியில், 30க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களாக பெய்யும் பருவமழை, இடையிடையே வெயில் நிலவுவதால், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விட்டுள்ளதோடு, உற்பத்தியும் அதிகரித்துள்ளது.தோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் கடந்த சில நாட்களாக மழை பொழிவுக்கு இடையிடையே வெயில் நிலவுவதால், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளன.பருவமழை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தேயிலை உற்பத்தியும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால், தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு, 30 கிலோ முதல் 50 கிலோ வரை தேயிலை பறிக்கின்றனர்,' என்றனர்.