அழிக்க இயலாத பார்த்தீனியம் செடிகள்
திருப்பூர்,: விவசாயிகள் கூறியதாவது: சாகுபடிக்காக நிலத்தை தயார் செய்யும் போது, வேகமாக பரவும் பார்த்தீனிய செடிகளை முழுவதுமாக அழிக்க முடிவதில்லை.ஆண்டுக்கு இரு முறை மட்டும் மேற்கொள்ளப்படும் மானாவாரி சாகுபடிக்கு சோதனையாக, விளைநிலங்களில், பார்த்தீனிய செடி, ஆக்கிரமித்து வருகிறது. ஒருங்கிணைந்த முறையில் இந்த களைச்செடியை கட்டுப்படுத்த, வேளாண்துறை வாயிலாக அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.