உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விபத்தில் சிக்கிய மாணவரை மீட்டு உதவிய கனிமொழி

விபத்தில் சிக்கிய மாணவரை மீட்டு உதவிய கனிமொழி

கோவை:தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. துாத்துக்குடி எம்.பி., கனிமொழி தலைமையிலான அக்குழுவினர், அதில் பங்கேற்று விட்டு, திருப்பூர் செல்ல, நீலாம்பூர் பைபாசில் காரில் பயணித்தனர்.அவ்வழியாக பைக்கில் சென்ற, பி.காம்., மாணவர் ராபின், லாரி மோதியதில் காயமடைந்து ரோட்டில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல, ஆம்புலன்ஸ் வர தாமதமானது. அதைக்கண்ட கனிமொழி, உடனடியாக காரை நிறுத்தி இறங்கி சென்றார்.மாணவரை மீட்டு, தி.மு.க., பிரமுகரின் காரில் ஏற்றி, அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தார். அம்மருத்துவமனைக்கும் சென்று, மாணவனுக்கு உரிய சிகிச்சை அளிக்க, மருத்துவ குழுவினரிடம் கேட்டுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை