உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முருகன் கோவில்களில் கார்த்திகை வழிபாடு

முருகன் கோவில்களில் கார்த்திகை வழிபாடு

முருகன் கோவில்களில் நடந்த கார்த்திகை பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தை மாத கார்த்திகையை முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. அதன்பின், காலை, 7:00 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களைக்கொண்டு அபிேஷக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. அதனை தொடர்ந்து, பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பாடல்களை பாடினர். பூஜையில் பங்கேற்ற நுாற்றுக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதே போல், முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில்களில் கார்த்திகை சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜையும் நடந்தது.* உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், தை மாத கார்த்திகையான நேற்று, முருகப்பெருமானுக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர் என பல்வேறு திரவியங்களில் மகா அபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி