உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நல வாரியத்தில் பதிவு செய்ய கிக் தொழிலாளர்கள் ஆர்வம்

நல வாரியத்தில் பதிவு செய்ய கிக் தொழிலாளர்கள் ஆர்வம்

மேட்டுப்பாளையம், உணவு டெலிவரி செய்யும், 'கிக்' தொழிலாளர்கள், நல வாரியத்தில் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.இணையதளம் சார்ந்த நிறுவனங்களில், டெலிவரி செய்யும் அமைப்புசாரா தொழிலாளர்கள் 'கிக்' தொழிலாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். கடந்த 2023ம் ஆண்டு 'கிக்' தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்பட்டது. தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்கு நேரில் சென்று நல வாரியத்தில் பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுகுறித்து, கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாலதண்டாயுதம் தெரிவித்ததாவது:-கோவை மாவட்டத்தில், அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் இணையம் சார்ந்த அமைப்புசாரா 'கிக்' தொழிலாளர்கள் பதிவு செய்யலாம். இவ்வாரியத்தில் 18 வயது முதல் 60 வயது வரையிலான தொழிலாளர்கள் இணையலாம். பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், இயற்கை மரணம், ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.உணவு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள்உள்ளிட்டவற்றுக்கு அலுவலர்கள் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிறப்பு முகாம்களும் நடைபெற்றது. இதனால் அவர்கள், நல வாரியத்தில் பதிவு செய்ய அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். 200 எண்ணிக்கையில் இருந்த பதிவு குறுகிய காலத்திலேயே 600 ஆனது. இப்பதிவு மேலும் உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை