உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

சோமனுார்: சோமனூர் அடுத்த ராமாச்சியம்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்கு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து மேளதாளத்துடன், ஏராளமான பெண்கள், தீர்த்தக் குடங்களை எடுத்து மாகாளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். நேற்று இரண்டு கால ஹோமங்கள், கலசங்கள் நிறுவப்பட்டன. இன்று காலை, நான்காம் கால ஹோமம் முடிந்து புனித நீர் கலசங்கள் மேளதாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, காலை, 9:30 மணிக்கு, ஸ்ரீ மக்கள விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, திருப்பணி குழுவினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி