உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை - திண்டுக்கல் இடையே மெமு ரயில் பயணிகள் ரிலாக்ஸ் ஆக பயணம்

கோவை - திண்டுக்கல் இடையே மெமு ரயில் பயணிகள் ரிலாக்ஸ் ஆக பயணம்

கோவை, ; கோவை - திண்டுக்கல் இடையேயான மெமு ரயில், நேற்று இயக்கப்பட்டது. பெரியளவில் பயணிகள் கூட்டம் காணப்படவில்லை.தீபாவளி பண்டிகைக்கு, பயணிகள் நெரிசலைக் குறைக்கும் வகையில், கோவை - திண்டுக்கல் இடையே, முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டது. இந்த சேவை, நேற்று முதல் நவ., 6 வரை (நவ., 3 தவிர) இயக்கப்படும்.கோவை - திண்டுக்கல்(06106) காலை 9:35 மணிக்கு புறப்பட்டு, மதியம், 1:10 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். திண்டுக்கல் - கோவை(06107) மெமு ரயில், திண்டுக்கலில் இருந்து மதியம், 2:00 மணிக்கு புறப்பட்டு, மாலை, 5:50 மணிக்கு கோவை வந்தடையும். எட்டு பெட்டிகள் கொண்ட இருந்த ரயிலில், 2400 பயணிகள் பயணம் செய்யலாம்.பயணிகள் யூ.டி.எஸ்., செயலி வாயிலாக, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த ரயில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.நேற்று காலை ரயில், கோவையிலிருந்து புறப்பட்டது. போதியளவு விழிப்புணர்வு இல்லாததாலும், கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டதாலும், குறைந்தளவு பயணிகளே பயணித்தனர். வரும் நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Gajageswari
நவ 03, 2024 05:47

இது போன்ற ரயில்கள் இயங்கும் என்ற அறிவிப்பு பேருந்து நிலையத்தில் கட்அவுட்/ மைக்கில் அறிவிக்க வேண்டும்


Sathiesh
நவ 01, 2024 21:09

8 பெட்டிகளில் 2400 பேர் பயணம் செய்யலாமா? அப்போ ஒரு பெட்டியில் 300 பேரா? பொதுப்பெட்டிகளில் சாதாரணமாக 100~120 பயணிகள் பயணம் செய்யலாம். அதெப்படி 300 பேர்?


Chandravadhanam Rengaraju
நவ 07, 2024 13:12

ஸ்டாண்டிங் டிக்கெட்ஸ் included...


MOHAN N G AMMU
நவ 01, 2024 15:43

இந்த ரயிலை நிரந்தரமாக மதுரை வரை இயக்கினால் நன்றாக இருக்கும் பொது மக்களுக்கும் மிகுந்த வசதியாக இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை