உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில்களில் மாசி மாத பூஜை; ஐயப்ப சுவாமிக்கு ஆராதனை

கோவில்களில் மாசி மாத பூஜை; ஐயப்ப சுவாமிக்கு ஆராதனை

வால்பாறை ; வால்பாறை சுப்ரமணியசுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள, ஐயப்ப சுவாமி கோவிலில் மாசி மாதம் முதல் நாளான நேற்று காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், தொடர்ந்து அபிேஷக பூஜை நடந்தது. அதன்பின் சிறப்பு அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலில் நேற்று காலை, 5:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5:30 மணிக்கு அபிேஷக பூஜை, 6:30 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.கருமலை பாலாஜி கோவிலில், காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், காலை, 5:30 மணிக்கு அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் பாலாஜி அருள்பாலித்தார்.வாழைத்தோட்டம் எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலில் நேற்று, காலை, 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது. அண்ணா நகர் ராமர் கோவிலில், காலை, 7:00 மணிக்கு மாசி மாத சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை