மேலும் செய்திகள்
இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
17-Sep-2025
பொள்ளாச்சி; மின்வாரியம் அங்கலக்குறிச்சி கோட்டத்தில், அங்கலக்குறிச்சி,தென்சங்கம்பாளையம் பிரிவு அலுவலகத்தில் உள்ள பகிர்மானங்கள், மின்நுகர்வோர் வசதிக்காக பிரிக்கப்பட்டு, புதிதாக கோட்டூர் பிரிவு அலுவலகம் துவக்கப்படவுள்ளது. அவ்வகையில், செல்லமுத்துநகர், பொங்காளியூர் மற்றும் கோட்டூர் மின்பகிர்மானங்களில், இரட்டை படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. தற்போது, கோட்டூர் பிரிவு அலுவலகம் துவங்கப்படவுள்ளதால், தற்போது ஒற்றைப்படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப்படும். அதன்படி, இம்மாதம் கணக்கீடு பணிகள் மேற்கொள்ளப்படவும் உள்ளது. எனவே, இப்பகுதியில் உள்ள மின்நுகர்வோர், மின் கணக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து, உரிய காலத்திற்குள் மின் கட்டண தொகையை செலுத்த வேண்டும். இனிவரும் நாட்களில், செல்லமுத்துநகர், பொங்காளியூர் மற்றும் கோட்டூர் மின் பகிர்மானங்களில் ஒற்றைப்படை மாதத்திலேயே கணக்கீடு செய்யப்படும். இதேபோல, அங்கலக்குறிச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட ஆழியார், டேம், ஜல்லிப்பட்டி, நவமலை ஆகிய மின்பகிர்மானங்களில் ஒற்றைப்படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப்பட்டு வந்த நிலையில் அதனை இரட்டைப் படை மாதத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளது. அதன்படி, அக்., மாதம் கணக்கீடு செய்யப்பட்டு, வரும் நாட்களில், இரட்டை படை மாதத்திலேயே மின் கணக்கீடு செய்யப்படும். இத்தகவலை மின்வாரியம், அங்கலக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்துள்ளார்.
17-Sep-2025