உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊட்டி உருளைக்கிழங்கு விலை உயர்வு

ஊட்டி உருளைக்கிழங்கு விலை உயர்வு

மேட்டுப்பாளையம்; ஊட்டி உருளைக்கிழங்கு விலை உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம், செயல்பட்டு வருகிறது. இங்கு, நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கேத்தி, கூடலுார் என பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், அதிகபட்சமாக 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை, ஊட்டி உருளைக்கிழங்கு ரூ.2,000திற்கும் குறைவாக விற்பனை ஆனது. தற்போது விலை உயர்ந்து, விற்பனையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து, கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஊட்டி உருளைக்கிழங்குகள் நேற்று அதிகபட்சமாக ரூ.2,500க்கு விற்பனை ஆனது. சுமார் 1,750 மூட்டைகள் லோடு வந்தன,'' என்றார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி